2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்கு வகித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி குறித்து பெரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், வைபவ் சூரியவன்ஷி 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுவார் என்ற செய்திகள் வெளிவந்தன,
பீகாரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இதற்காக வைபவுக்கு ஹால்டிக்கெட்டும் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. தகவல்களின்படி, வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு மையம் சமஸ்திபூரில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி முதல்வர் நீல் கிஷோர் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால் சமீபத்திய தகவலின்படி, வைபவ் சூரியவன்ஷி தேர்வு எழுத மாட்டார் என்று அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதால், வருகைப்பதிவு குறைந்துள்ளதாகவும், இருப்பினும் பள்ளி நிர்வாகம் தேர்வெழுத அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வு எழுத செல்லமாட்டார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
