Close Menu
    What's Hot

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»“நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!
    உலகம்

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    Editor web3By Editor web3February 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trump on Op Sindoor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய அணு ஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாகக் கூறி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆபரேஷன் சிந்துார்’  காரணமாகக் கடுமையான போர் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்குச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின.

    இதுவரை இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறிவருகிறார். அந்தவகையில், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ‘ஸ்டேட் ஆஃப் தி யூனியன்’ ( உரையில், “நான் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இந்தப் போரில் சுமார் 3.5 கோடி  மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளும் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராக இருந்ததாகவும், தனது தனிப்பட்ட முயற்சியால்தான் ஒரு மிகப்பெரிய உலகப் பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    போரை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், இரு நாடுகளின் மீதும் 200 சதவீத வரி  விதிப்பேன் என்று தான் மிரட்டியதாகவும், அந்தப் பொருளாதார அச்சமே இரு நாடுகளையும் பின்வாங்கச் செய்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

    அதிபர் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை இந்தியத் தரப்பு ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளது. “போர் நிறுத்தம் என்பது அண்டை நாடுகளுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்பட்ட முடிவே தவிர, இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக்கோப்பை 2026!. வரலாறு படைத்த ஹாரி ப்ரூக்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இங்கிலாந்து!
    Next Article 2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    August 5, 2026

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    August 5, 2026

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.