Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது; இது ரொம்ப லேட்!. டிரம்ப் சாடல்!
    உலகம்

    ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது; இது ரொம்ப லேட்!. டிரம்ப் சாடல்!

    Editor web3By Editor web3March 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump 155 TAX
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் தரப்பு தற்போது அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், ஈரானின் இந்த கோரிக்கை “சற்று தாமதமானது” என்று குறிப்பிட்ட அவர், “தற்போது அவர்களை விட நாங்களே (அமெரிக்கா) போரிட அதிக ஆர்வமாக உள்ளோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க ராணுவம் “அற்புதமான” இஸ்ரேலியப் படைகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்   கட்டமைப்புகளை “ஒவ்வொரு மணி நேரமும்” அழித்து வருவதாகத் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்டர் மியாமி கால்பந்து அணியினருடன் (Inter Miami soccer team) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஈரான் தற்போது அமெரிக்காவைத் தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். “அவர்கள் எங்களை அழைத்து, எப்படி ஒரு ஒப்பந்தம் செய்வது என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் ‘நீங்கள் வருவதற்குச் சற்று தாமதமாகிவிட்டது’ என்று கூறிவிட்டேன். இப்போது அவர்களை விடவும் போரிடுவதில் நாங்களே அதிக ஆர்வமாக உள்ளோம்,” என்று ட்ரம்ப் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை போரில் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்துள்ளதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “ஈரானுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அவர்களின் 24 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டு, கடற்படை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களின் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால், தற்போது அவர்களிடம் விமானப்படை என்ற ஒன்றே இல்லை. ஈரானின் தகவல் தொடர்பு வசதிகள், ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் முறையே 60% மற்றும் 64% வரை நிர்மூலமாக்கப்பட்டுள்ளன,” என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்திற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டுள்ளார். “ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), ராணுவம் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆயுதங்களைக் கைவிடுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் நீங்கள் கொல்லப்படுவது உறுதி. இதுவே ஈரானிய மக்களுக்காக எழுந்து நின்று, உங்கள் நாட்டை மீட்டெடுக்க உதவும் சரியான தருணம்,” என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    சரண் அடைய முன்வருபவர்களுக்கு ‘பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் ட்ரம்ப் சலுகை வழங்கியுள்ளார். “எங்களுடன் ஒத்துழைத்து சரண் அடைபவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வோம். இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் மரணம் நிச்சயம் என்பதை உறுதிப்படக் கூறுகிறேன்,” என மிகக் கடுமையான தொனியில் அவர் எச்சரித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND vs NZ T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி!. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
    Next Article தந்தைக்கு போடி.. மகனுக்கு கம்பமா?. தேனியில் ஓபிஎஸ் குடும்பத்தின் தேர்தல் வியூகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    June 9, 2026

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.