Close Menu
    What's Hot

    போதைப் பொருள் விழிப்புணர்வு ஓட்டம்..! முதல்வர் பங்கேற்பு..!

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!
    தமிழ்நாடு

    பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!

    Editor web3By Editor web3April 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin premalath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம்” என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியைத் தந்துள்ளது.

    சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும் மேடையில் இருக்க “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டுமே மு.க ஸ்டாலின் அரசு மீது உள்ளது .

    நான் சொல்றேன் இன்றைக்கு ஒரு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைத்திருக்கிறேன். அப்படி எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால் நான் அண்ணன் மு.க ஸ்டாலினிடம் நேரடியாக பேசி சரி செய்வேன். இனி எல்லா இடத்திலும் சிசிடிவி மற்றும் பெண்களுக்கான அனைத்து பாதுகாப்புகளையும் அண்ணன் தருவார் என இந்த மேடையில் உறுதியாக கூறுகிறேன். ஒரு பெண் நடு இரவில் தனியாக செல்லும் நாள் எப்போது வருகிறதோ அதுதான் சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தம் என்றார் காந்தி. அது விரைவில் அண்ணன் ஆட்சியில் நடக்கும் . என்று திமுகவை உயர்த்தி பேசினார்.

    எனினும் ஸ்டாலினும் மேடையில் இருக்கும் போது இப்படி பிரேமலதா பேசியது ஒருவிதத்தில் சரி என்றும் , சரியல்ல என்ற விவாதங்கள் பரவிவருகிறது. பிரேமலதா முன்வைத்த விமர்சனம், ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக, பாஜக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரேமலதாவின் இந்தப் பேச்சைத் தங்கள் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் தாக்குதலால் அதிருப்தியடைந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரங்களின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் கடுகடுத்த குரலில் அறிவுறுத்தியுள்ளாராம். பிரேமலதாவின் பேச்சால் ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்புகளைச் சரிசெய்யவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும் திமுக தனது பிரசார வியூகத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரேமலதாவுக்கு முதல்வர் தரப்பிலிருந்து சென்ற மெசேஜ் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!
    Next Article தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    போதைப் பொருள் விழிப்புணர்வு ஓட்டம்..! முதல்வர் பங்கேற்பு..!

    June 26, 2026

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    June 25, 2026

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப் பொருள் விழிப்புணர்வு ஓட்டம்..! முதல்வர் பங்கேற்பு..!

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.