“தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம்” என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியைத் தந்துள்ளது.
சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும் மேடையில் இருக்க “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டுமே மு.க ஸ்டாலின் அரசு மீது உள்ளது .
நான் சொல்றேன் இன்றைக்கு ஒரு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைத்திருக்கிறேன். அப்படி எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால் நான் அண்ணன் மு.க ஸ்டாலினிடம் நேரடியாக பேசி சரி செய்வேன். இனி எல்லா இடத்திலும் சிசிடிவி மற்றும் பெண்களுக்கான அனைத்து பாதுகாப்புகளையும் அண்ணன் தருவார் என இந்த மேடையில் உறுதியாக கூறுகிறேன். ஒரு பெண் நடு இரவில் தனியாக செல்லும் நாள் எப்போது வருகிறதோ அதுதான் சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தம் என்றார் காந்தி. அது விரைவில் அண்ணன் ஆட்சியில் நடக்கும் . என்று திமுகவை உயர்த்தி பேசினார்.
எனினும் ஸ்டாலினும் மேடையில் இருக்கும் போது இப்படி பிரேமலதா பேசியது ஒருவிதத்தில் சரி என்றும் , சரியல்ல என்ற விவாதங்கள் பரவிவருகிறது. பிரேமலதா முன்வைத்த விமர்சனம், ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக, பாஜக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரேமலதாவின் இந்தப் பேச்சைத் தங்கள் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் தாக்குதலால் அதிருப்தியடைந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரங்களின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் கடுகடுத்த குரலில் அறிவுறுத்தியுள்ளாராம். பிரேமலதாவின் பேச்சால் ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்புகளைச் சரிசெய்யவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும் திமுக தனது பிரசார வியூகத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரேமலதாவுக்கு முதல்வர் தரப்பிலிருந்து சென்ற மெசேஜ் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
