Close Menu
    What's Hot

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி
    Featured

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    Editor web1By Editor web1April 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,262 கோடி என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

    தமிழ்நாட்டின் வாக்காளர் தீவிரத் திருத்தப் (SIR) பணிக்கு பிறகு 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7, 728 பேர் மூன்றாம் பாலினத்தவர். 14.59 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

    இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு  கண்காணிக்கப்படும் என்றார். இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 65 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,262 கோடி என்றும் ரொக்கமாக ரூ.543 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்ட அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு மையங்களுக்கு வரும் அனைத்துப் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காக 300 கம்பெனிப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவை அந்தந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் எவ்விதமான விரும்பத்தகாத சம்பவங்களும் இன்றித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?
    Editor web1
    • Website

    Related Posts

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    April 22, 2026

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    April 22, 2026

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    Trending Posts

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    April 22, 2026

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    April 22, 2026

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    April 22, 2026

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    April 22, 2026

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.