Close Menu
    What's Hot

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு
    Featured

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    Editor web2By Editor web2August 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 uhay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

    காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில் பெண்களைப் பற்றி வக்கிரமாகவும் அவதூறாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சென்னையில் நடந்த அதிரடி

    இந்த வழக்கின் அடிப்படையில், இன்று விடியற்காலையில் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்ற தஞ்சாவூர் தனிப்படை போலீஸார், அவரை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் ஒரு வழியாக  காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதியை,  சாலை மார்க்கமாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சை காவல் நிலையத்தில் போலீஸ் குவிப்பு

    இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அரசு தரப்பிலும் உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில்,  வாகனத்தில் அழைத்து வரப்பட்ட உதயநிதி 2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டனர்.

    கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்த நிலையில், விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியானது. உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. திமுகவினர் அதிகளவு கூடாத வண்ணம் தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திடீர் யூ டர்ன்… விசாரணை இடம் மாற்றம்

    இந்த நிலையில், உதயநிதியை அழைத்து வந்த வாகனம், தஞ்சாவூர் நகர எல்லைக்குள் நுழையாமல் திடீரென யூ-டர்ன் அடித்துச் செங்கிப்பட்டி காவல் நிலையத்தை நோக்கித் திருப்பி விடப்பட்டது. ஏற்கனவே தஞ்சை தெற்கு மற்றும் கிழக்குக் காவல் நிலையங்கள் முன்பாக திரளான திமுக தொண்டர்கள் கூடியிருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீஸார் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.

    செங்கிப்பட்டி காவல் நிலையம் வந்தடைந்ததும், “தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில்தான் என் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது, அங்குதான் விசாரணைக்கு வருவேன்” எனக் கூறி உதயநிதி வாகனத்தை விட்டு இறங்க மறுத்ததால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

    பின்னர் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் செல்லச் சம்மதம் தெரிவித்தார். தகவல் அறிந்து திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாகச் செங்கிப்பட்டிக்கு விரைந்து வந்து உதயநிதியைச் சந்தித்தனர். தற்போது செங்கிப்பட்டி காவல் நிலையத்தை நூற்றுக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி வருவதால், அப்பகுதியில் பெருமளவில் ஆயுதப்படைப் போலீஸார் குவிக்கப்பட்டுப் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலிடம், தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில், காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    DMKProtest SengipattiPoliceStation TamilNaduPolitics UdhayanidhiStalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி
    Next Article “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!
    Editor web2
    • Website

    Related Posts

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    August 4, 2026

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    August 4, 2026

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.