Close Menu
    What's Hot

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ஆன்மீகம்»தஞ்சை பெரிய கோயிலின் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
    ஆன்மீகம்

    தஞ்சை பெரிய கோயிலின் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026Updated:April 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thanjai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று (27.04.2026) விமர்சையாக நடைபெற்றது.

    தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (27.04.2026) காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 15-ம் தேதி தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி தொடங்கியது. 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் 50 அடி உயரத்தை எட்டியது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இந்தத் தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளினர். பின்னா், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தியாகேசா, ஆரூரா என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செய்திருந்தன. வடக்கு வீதி சாலையில் இருபுறமும் கழிநீர் செல்லும் கால்வாய்கள் திறந்தநிலையில் உள்ள இடங்களில் இரும்பு கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி செய்யப்பட்டிருந்தன.

    தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! களைகட்டிய சித்திரைத் திருவிழா!
    Next Article விஜய்க்கு நிம்மதி!. சொத்து விவர புகார் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    July 21, 2026

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.