மே 4ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயரின் 175ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று திராவிடர் இயக்கத்தை உருவாக்கிய சர்பிடி தியாகராயர், வரலாற்று பெருமைமிக்க ஒரு வாழ்வை அமைத்தவர்.
உலகம் போற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி வந்துள்ளது அதற்கு அடித்தளம் இட்டவர் சர் பி.டி தியாகராயர்.
இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு யாருக்கும் அடிமையாகக் கூடாது.
மிகப்பெரிய எழுச்சியை இன்று பார்ப்பதாக கி.வீரமணி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 184 என்ற அளவில் திமுக தொகுதியை வென்றது, அப்போது ஆருடம் கூறியவர்கள் துண்டைக் காணோம் துணியை காணும் என்று ஓடிவிட்டதாகவும் மே 4ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். சென்னை கோட்டை திமுக கூட்டணிக்கு, மற்றவர்களுக்கு மனக்கோட்டை தான் என விமர்சனம் செய்தார்.
