ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 ஆகிய பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் சேவை இனி இயங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன்களில், செப்டம்பர் 8ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இனி இயங்காது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பழைய இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் வசதியில் புதிதாக வழங்கப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை தர முடியாத சூழல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பயனர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் இமேஜ்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை இழப்பதை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே புதிய வெர்ஷன்களுக்கு மாறிக்கொள்ளுமாறு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
