முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் விஜய். பதவியேற்றவுடன், 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு அதிரடிப் படை அமைப்பு, போதைப் பொருட்களை ஒழிக்க தனிப்படை என 3 கையெழுத்துகளை இட்டார். இவற்றில் மதுபான ஒழிப்பு குறித்த அறிவிப்புகள் இல்லையே என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள 186 கடைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் அருகேயுள்ள 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை 2 வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
