Close Menu
    What's Hot

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வந்தார் இபிஎஸ்!. சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!.
    தமிழ்நாடு

    திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வந்தார் இபிஎஸ்!. சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!.

    Editor web3By Editor web3May 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    c.v.shanmugam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி என மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.  தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார்.

    இந்த இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தான் தொடங்கப்பட்டது. இந்த 53 ஆண்டுகாலம் தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்கிறோம். 3, 4 தலைமுறைகளாக தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்து வருகிறோம். இந்த சூழலில், எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க சார்பில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.  அதனை பெரும்பாலான சட்டமன்ற உறுதிப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். தி.மு.க-வோடு இணைந்தால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.

    அதனால் பெரும்பான்மையான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சராக உள்ள விஜய்யின் த.வெ.க ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

    அ.தி.முக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்ல, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க-வுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..! மூடப்படுகிறது 717 டாஸ்மாக் கடைகள்..!
    Next Article புதிய சபாநாயகராக JCD பிரபாகர் தேர்வு!. துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!
    Editor web3
    • Website

    Related Posts

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.