இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. இராமநாதபுரம் மாெட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த திருவாளர்கள் அசோக், அந்தோணி ராஜன், சந்தான ஆரோக்கியதாஸ், அருள் தே பிரிட்ஜோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய 6 மீனவர்கள் 10.05.2026 அன்று மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், எல்லை தாண்டியதாகக் கூறி இன்று (12.05.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்பயடைால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
