Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!
    இந்தியா

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kudagu elephant attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரண்டு யானைகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டதில், சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னையைச் சேர்ந்த ஜின்மு என்ற ஜுனேஷ்(33) என்ற பெண், குடகு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். சம்பவத்தன்று, துபாரே முகாமில் உள்ள ஆற்றில் யானைகள் குளிப்பதை அவர் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ‘கஞ்சன்’ என்ற யானை, ‘மார்த்தாண்டா’ என்ற மற்றொரு யானையை திடீரென  முட்டித் தள்ளி சண்டையிட்டது.

    https://x.com/ndtv/status/2056303329509335115?

    யானைகளின் இந்தத் திடீர் மோதலால் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜுனேஷ் மீது சாய்ந்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், ஒரு யானையின் அடியில் சிக்கியதோடு, மற்றொரு யானை மிதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தன. இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த பிற சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் பி காந்த்ரே, அப்பெண்ணின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். வனவிலங்குகளைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்துமாறு காந்த்ரே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வளர்ப்பு யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் நடத்தையைக் கணிப்பது கடினமாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

    சுற்றுலாப் பயணிகள் யானைகளின் தும்பிக்கைகளைத் தொடுவதையும், புகைப்படம் எடுப்பதற்காக அருகில் நிற்பதையும், யானைகளைக் குளிப்பாட்டுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும் தடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சுற்றுலாப் பயணிகள் எல்லா நேரங்களிலும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிப்பதை உறுதிசெய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.
    Next Article அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    July 4, 2026

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    July 4, 2026

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.