Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்… மோடி சொன்ன அறிவுரை!
    அரசியல்

    நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்… மோடி சொன்ன அறிவுரை!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Modi cabinet
    New Delhi, Aug 5 (ANI): Prime Minister Narendra Modi meets with Cabinet Committee on Security (CCS), Union Ministers S Jaishankar, Amit Shah, Nirmala Sitharaman, Rajnath Singh and others, gets a brief on the situation in Bangladesh, at 7, Lok Kalyan Marg, in New Delhi on Monday. (ANI Photo)
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று ட்முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த இந்த உயர்மட்ட கூட்டத்தில், அரசின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து நடைபெற்ற முழுமையான அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோடி அரசு ஜூன் 9-ஆம் தேதி 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூழலில், அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

    கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த கால நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையாக எதிர்காலத்தை நோக்கி செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு அமைச்சகமும் ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்கு திட்டத்தை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்றும், சீர்திருத்தங்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    நிர்வாகத்தில் வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை ஆகியவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியை அரசின் மையக் கொள்கையாக வைத்துச் செயல்படுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமின்மை, மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச சூழல்களையும் கூட்டத்தில் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக அரசு மேலும் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அமைச்சர்களும் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துகளை முன்வைத்ததாகவும், அதற்கு பிரதமர் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!
    Next Article ஓய்வு பெறுகிறாரா தோனி..? போட்டுடைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!
    Editor web1
    • Website

    Related Posts

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.