Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உணவக பெண் ஊழியர் மீது தாக்குதல்!. தவெக நிர்வாகி மகன் மீது புகார்!. சிசிடிவி காட்சிகள் அழிப்பு!
    தமிழ்நாடு

    உணவக பெண் ஊழியர் மீது தாக்குதல்!. தவெக நிர்வாகி மகன் மீது புகார்!. சிசிடிவி காட்சிகள் அழிப்பு!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirupur tvk attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளியை தவெக நிர்வாகியின் மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் எழுந்துள்ளது.

    தாராபுரம் அருகேயுள்ள குள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த லதா (40).  கணவனை இழந்த பெண், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக சர்ச் சாலையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த உணவகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர் கராத்தே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

    சமீபத்தில், உணவகத்தில் பணி நிமித்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஹரிஹரன் அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி, காதின் அருகே பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த லதாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த வாடிக்கையாளர்களும், லதாவின் உறவினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் போலீசாரிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும், ஆதாரங்களை மறைப்பதற்காக அவை அழிக்கப்பட்டிருப்பதாகவும் லதாவின் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாராபுரம் காவல் துறையினர் லதா மற்றும் ஹரிஹரன் ஆகிய இருதரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் பயங்கரம்!. விவசாயி மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு!. முதுகில் பாய்ந்த 10 குண்டுகள்!
    Next Article மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.