Close Menu
    What's Hot

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
    உலகம்

    அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!

    Editor web1By Editor web1May 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    வெள்ளை மாளிகையின் 17-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு அருகே சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். திடீரென அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதனால் பதற்றமடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் அந்த நபருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டநிலையில், தாக்குதல் நடத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த நபர் 21 வயதான நாசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதமே வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது 15 முதல் 30 ரவுண்டுகள் வரை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்குதல் நடத்தியவரின் குண்டு பட்டு காயமடைந்தாரா அல்லது பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் காயமடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே இருந்தார். எனினும், அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது. அங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முடக்க நிலை நீக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ மற்றும் ரகசிய பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவல்துறையில் அதிரடி மாற்றம்!- “தினமும் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை”
    Next Article களைகட்டிய கன்னியாகுமரி: கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
    Editor web1
    • Website

    Related Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    July 17, 2026

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.