Close Menu
    What's Hot

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!
    Featured

    எங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எங்களுக்கு நிதி வேண்டாம்..! நீதி தான் வேண்டும்..! கோவை சிறுமியின் தயார் கதறல்..!”எனக்கு நிதி வேண்டாம்… என் குழந்தைக்கு நீதி வேண்டும்” என கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தாயார் பவித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    அதாவது “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

    மேலும், “யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை வாங்கிச் சென்றுள்ளனர். உடலை ஒப்படைத்ததில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நடந்துள்ளது. உடலை எரிப்பதில் ஏன் அவசரம் காட்டப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

    அத்துடன், “என் மீது தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். வழக்கை திசைதிருப்பவே அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும். கொலையாளிக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற தவறு செய்யக் கூடாது. என் குழந்தை அனு அனுவாக இறந்துள்ளது; அதேபோல் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    முதலமைச்சர் தங்களிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக பவித்ரா தெரிவித்தார். மேலும், கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அந்த பெண்ணிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதடாலடியாக உயர்ந்த தங்கம் விலை!. இன்றைய ரேட் இதோ!.
    Next Article மகளிருக்கு ரூ.2500 எப்போது?. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    July 4, 2026

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.