Close Menu
    What's Hot

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மே மாதக் கூட்டம் நடைபெறாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
    அரசியல்

    மே மாதக் கூட்டம் நடைபெறாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 chennai corporation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெகவின் முதலமமைச்சர் ச.ஜோசப் விஜய், நகராட்சி நிர்வாகத்தையும் தன் வசமே வைத்துள்ளார். அதன் கீழ் வரும் சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா, இதுவரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக ஓய்வில் இருந்த அவர் நேற்றுதான் அலுவல் பணியை தொடங்கியுள்ளார்.

    மேயரைப் போலவே, துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களும் நிர்வாக பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகள் திமுக வசம்தான் உள்ளன. மற்ற 47 வார்டுகள் மட்டுமே அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் உள்ளன.

    பொதுவாக மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என்றால் 25 நாட்களுக்கு முன்பாகவே மண்டலக்குழு தலைவர்கள் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும், அதில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் தொடர்பாக அந்தந்த நிலை குழுக்களுக்கு தீர்மானங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல நிலைக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் இருவரின் ஒப்புதலுக்கு பிறகு மன்ற செயலாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ஆணையர் மாமன்ற கூட்டத்தை நடத்த அனுமதி அளிப்பார்.

    மேலும் மாமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு முன்பு முறைப்படி ஆணையர் 7 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் உள்ளன.
    இதன் காரணமாக மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருவ மழை நெருங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை, மக்கள் பிரதிநிதிகளின் பங்கெடுப்பு இல்லாததால் முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி வளர்ச்சி பணிகள் எதுவும் கவுன்சிலர்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போதும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரைன்னா என்ன? பேரம்னா என்ன? – தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா கேள்வி?
    Next Article முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி பயணம் ; பிரதமர் உள்பட தேசிய கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Trending Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    June 2, 2026

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.