Close Menu
    What's Hot

    குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    திமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.
    Featured

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    Editor web3By Editor web3June 3, 2026Updated:June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi fire 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஐந்து மாடி தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், தீயில் சிக்கிய 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    மாளவியா நகரின் ஹவுஸ் ராணி (Hauz Rani) பகுதியின் குறுகலான தெருவில் அமைந்துள்ள ‘மிகாசா இன்’ (Micasa Inn) என்ற ஐந்து மாடி ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை சுமார் 8.50 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் ஹோட்டலில் இருந்த பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், புகை மூட்டம் மற்றும் தீயின் வீரியத்தை அவர்களால் உடனடியாக உணர முடியாமல் போயுள்ளது.

    உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சுமார் 25 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 40-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் என்று கூறப்படுகிறது. தீயின் பிடியில் இருந்து தப்பிக்க சில நபர்கள் ஹோட்டல் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

    ஹோட்டல் உணவகத்தில் பணியாற்றும் கேசர் சிங் என்ற சமையல் கலைஞர் இந்த கோர விபத்து குறித்துப் பேசுகையில், “காலை 8:00 மணியளவில் சமையலறையில் இருந்த எலக்ட்ரிக் ஸ்டவ்வை ஆன் செய்ய முயன்றபோது திடீரென தீப்பிழம்புகள் எழும்பின. ஹோட்டல் முழுவதும் தீ பரவுவதை உணர்ந்து உடனடியாக எனது உதவியாளரை எச்சரித்துவிட்டு, எப்படியோ தப்பித்து வெளியே வந்தேன்” எனக் கூறினார்.

    விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, பேரிடர் மேலாண்மை அமைப்பு (DDMA) மற்றும் CATS ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் 47 பேர் இடிபாடுகளிலிருந்தும் தீயிலிருந்தும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    https://x.com/PMOIndia/status/2062066482897674699?

    இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் அலுவலகம்  அறிவித்துள்ளது.

    https://x.com/gupta_rekha/status/2062064183391535510?

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ‘X’ தளப் பதிவில், “இந்த விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் ஆதரவையும் வழங்கும். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!
    Next Article மாவட்ட வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    June 3, 2026

    திமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி

    June 3, 2026

    உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    திமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி

    உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.