Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    2வது முறையாக டெல்லி விசிட்..!! தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்
    Featured

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    Editor web2By Editor web2June 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 10 12h10m36s554
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக, கிராமத்து மண்வாசனையை உலகறியச் செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

    பாரதிராஜாவின் நீண்டகாலத் திரையுலகப் பயணத்திலும் வாழ்விலும் நெருங்கிய நண்பராக விளங்கிய இயக்குநர் கங்கை அமரன், பாரதிராஜாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுததோடு, அவரது மனைவியிடம் ஆவேசமும் ஆதங்கமுமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அங்கிருந்தோரை உருக வைக்கிறது.

    பாரதிராஜா மனைவியிடம் வெடித்த கங்கை அமரன்

    பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு, தேனியில் இருந்து பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா, தனது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். கணவரின் உடலைப் பார்த்துக் கலங்கி நின்ற சந்திரலீலாவைக் கண்டதும், அங்கிருந்த இயக்குநர் கங்கை அமரன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்தார்.

    vlcsnap 2026 06 10 12h10m49s269

    நெருங்கிய நண்பனை இழந்த சோகத்தில் இருந்த கங்கை அமரன், சந்திரலீலாவைப் பார்த்து, “கடைசியாக யாரும் இல்லாமல் ஓடிப் போய்விட்டீர்கள்… அவரை இப்படி அனாதையாக விட்டு விட்டீர்களா?” என்று மிகுந்த ஆதங்கத்துடனும் ஆவேசத்துடனும் அழுதுகொண்டே கேட்டார். ‘எப்படி வாழ்ந்த மனுஷன்… இப்படி அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களா?’ என பாரதிராஜாவின் வாழ்நாளின் கம்பீரத்தை நினைவுகூர்ந்து அவர் எழுப்பிய கேள்வி, அங்கிருந்த ஒட்டுமொத்தச் சூழலையும் உலுக்கியது.

    கங்கை அமரன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர், நிலைமையைக் கட்டுப்படுத்த நினைத்து, “இத்தருணத்தில் அப்படிப் பேசாதீர்கள்” என்று கங்கை அமரனை வார்த் தைகளால் தடுக்க முயன்றார். ஆனால், நண்பனைப் பிரிந்த துயரத்தில் இருந்த கங்கை அமரன், “போயா… அப்படித்தான் நான் பேசுவேன்!” என்று கோபத்துடன் கூறிவிட்டு, தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    பாரதிராஜாவும், இளையராஜா-கங்கை அமரன் சகோதரர்களும் திரையுலகிற்கு வரும் முன்பிருந்தே, தேனி மாவட்ட மண்ணில் இருந்தே ஆழமான நட்பு கொண்டவர்கள்.

    ’16 வயதினிலே’ தொடங்கிப் பல காவியப் படங்களில் பாரதிராஜாவின் அக்மார்க் கிராமத்துக் கதைகளுக்குக் கங்கை அமரனின் பாடல்களும், வசனங்களும், இசையும் பெரும் பலமாக இருந்தன. திரையுலகத் தாண்டி குடும்ப உறவுகளாக வாழ்ந்தவர்கள் என்பதால், பாரதிராஜாவின் இறுதித் தருணங்களில் ஏற்பட்ட ஒரு சில தனிப்பட்ட இடைவெளிகள் கங்கை அமரனை இவ்வளவு பெரிய ஆதங்கமாக வெடிக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்ச்சிப் பெருக்கான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!
    Next Article பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    June 10, 2026

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    June 10, 2026

    2வது முறையாக டெல்லி விசிட்..!! தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    2வது முறையாக டெல்லி விசிட்..!! தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    அழியாத முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா..!! துணை குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.