Close Menu
    What's Hot

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    அனைவரின் ஆசீர்வாதங்களுடன்.. அரசியலுக்குள் நுழைகிறேன்..!! ராகவா லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்
    Featured

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 foot ball D
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ சிட்டியில் பரபரப்பான தொடக்கத்தைக் கண்டுள்ளது. கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகமாகப் பதிவான இந்த விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில்,  மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

    கடந்த 2010 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், ஜோகன்னஸ்பர்க் நகரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து, தற்போது மெக்சிகோவின் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு ஜூலியன் குய்னோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமினெஸ் ஆகியோர் அடித்த கோல்களால் மெக்சிகோ 3 புள்ளிகளைப் பெற்றது.

    003 foot ball Bஇருப்பினும், இந்த ஆட்டத்தின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது ஒழுங்குமுறை நடவடிக்கையாக வழங்கப்பட்ட 3 சிவப்பு அட்டைகள் தான். உலகக் கோப்பை வரலாற்றிலேயே தொடக்க ஆட்டம் ஒன்றில் 3 சிவப்பு அட்டைகள் காட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    மெக்சிகோவின் அதிரடித் தொடக்கம்
    ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே மெக்சிகோ தனது முதல் கோலை அடித்து அசத்தியது. தென்னாப்பிரிக்க வீரர் சிபெபெலோ சிதோலிடமிருந்து,  எரிக் லிரா பந்தைப் பறிக்க, அதை லாவகமாகப் பிடித்த ஜூலியன் குய்னோன்ஸ், பெனால்டி பகுதிக்கு வெளியேயிருந்து பந்தை கோல் போஸ்ட்டிற்குள் செலுத்தினார். இதுவே 2026 உலகக் கோப்பையின் முதல் கோல் ஆகும்.

    இந்த கோல் ஜேவியர் அகுய்ரேவின் மெக்சிகோ அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது. இதனால் ஆட்டத்தின் பெரும்பகுதி பந்து அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி முடிவதற்குள் குய்னோன்ஸ் மற்றொரு கோல் அடிக்க முயன்றார், ஆனால் பந்து போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியால் மெக்சிகோவின் தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க முடியவில்லை.

    தென்னாப்பிரிக்காவின் பின்னடைவு
    தென்னாப்பிரிக்க வீரர் சிபெபெலோ சிதோலுக்கு ‘ஸ்ட்ரெய்ட் ரெட் கார்டு’  காட்டப்பட்டதை அடுத்து அந்த அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

    003 foot ball cஏற்கனவே மெக்சிகோவின் முதல் கோலுக்குக் காரணமான தவறான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிதோலி, இம்முறை மெக்சிகோ மிட்பீல்டர் பிரையன் குட்டிரெஸ் கோல் அடிக்க வேகமாக முன்னேறியபோது பெனால்டி பகுதிக்கு வெளியே அவரை கீழே தள்ளி வீழ்த்தினார். கோல் அடிப்பதற்கான தெளிவான வாய்ப்பை அவர் தடுத்ததால், நடுவர் வில்டன் சாம்பயோ எவ்வித தயக்கமுமின்றி அவருக்கு சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார்.

    இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.  மெக்சிகோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.

    இரண்டாவது சிவப்பு அட்டை!
    ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் மெக்சிகோ தனது இரண்டாவது கோலை பதிவு செய்தது. அனுபவமிக்க நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ், மிக அருகில் இருந்து தலையால் முட்டி பந்தை கோலாக்கினார். இதன் மூலம் மெக்சிகோ 2-0 என பலமான முன்னிலை பெற்றது.

    இந்த கோலின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். இதற்குச் சற்று முன்புதான், உலகக் கோப்பையின் மிக இளம் வீரரான 17 வயது கில்பர்டோ மோரா மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்தபோது ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்.

    இதற்கிடையில், தென்னாப்பிரிக்க வீரர் தெம்பா ஸ்வானே, மெக்சிகோவின் ராபர்டோ அல்வராடோ மீது வன்முறையான முறையில் மோதியதாக மறுஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து நடுவர் அவருக்கும் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 வீரர்களாகக் குறைந்தது.

    இதன் மூலம், உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இரண்டு வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை தென்னாப்பிரிக்கா பெற்றது .முன்னதாக 1990-ல் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கேமரூன் அணி இந்த நிலையைச் சந்தித்தது.

    10 வீரர்களுடன் முடித்த மெக்சிகோ
    ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் கோல் வாய்ப்பைத் தடுத்ததற்காக மெக்சிகோ வீரர் சீசர் மான்டெஸ்  என்பவருக்கும் ஸ்ட்ரெய்ட் ரெட் கார்டு காட்டப்பட்டது.

    003 foot ball A

    இதனால் மெக்சிகோ அணியும் 10 வீரர்களாகக் குறைந்தது. இறுதியில் 10 மெக்சிகோ வீரர்களும், 9 தென்னாப்பிரிக்க வீரர்களும் களத்தில் இருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் 3 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டெபோஹோ மொகோயினா, கோசினாதி சிபிசி ஆகியோருக்கும் மெக்சிகோவின் பிரையன் குட்டிரெஸுக்கு மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

    Group A பிரிவில் மெக்சிகோ 3 புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. தனது அடுத்த போட்டியில் ஜூன் 18 அன்று தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

    இதேபோல் தென்னாப்பிரிக்கா அணி, ஜூன் 18 அன்று செக் குடியரசு அணியை எதிர்கொள்கிறது. இதில் தோற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு மிகவும் கடினமாகிவிடும்.

    FIFA Opening Match FIFA World Cup Red Cards
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்
    Next Article கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினி
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

    June 12, 2026

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    June 12, 2026

    அனைவரின் ஆசீர்வாதங்களுடன்.. அரசியலுக்குள் நுழைகிறேன்..!! ராகவா லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    அனைவரின் ஆசீர்வாதங்களுடன்.. அரசியலுக்குள் நுழைகிறேன்..!! ராகவா லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!

    இந்திய மாம்பழங்களுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்.. இனி NO தடை..!! நேபாள அரசு அறிவிப்பு..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த வன்முறை..!! 30 வீடுகள் தீயிட்டு எரிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.