சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

“சீயான் 63” விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63” தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளநிலையில், விக்ரம் ரசிகர்களும், திரையுலக வட்டாரங்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
