Close Menu
    What's Hot

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்
    Featured

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 kovai gh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை அரசு தலைமை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் (Emergency Ward), கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பெண் நோயாளி ஒருவரின் படுக்கையிலேயே, மற்றொரு ஆண் நோயாளியையும் அமர வைத்துச் சிகிச்சை அளித்த அநாகரிகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

    கோவை அரசு மருத்துவமனையில், அண்மைக் காலமாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

     இதன் உச்சக்கட்டமாக, நெஞ்சுவலி காரணமாக அவசரக் கால சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் அதே படுக்கையில் மற்றொரு ஆண் நோயாளியையும் படுக்க வைத்து உள்ளனர்.

    ​பின்னர், அந்த ஆணை எழுப்பி அதே பெட்டில் அமர வைத்து விட்டு, மீண்டும் மற்றொருவரை அங்கு அமர வைப்பது என அவசரச் சிகிச்சை பிரிவுக்கே உரிய எந்தவொரு அடிப்படை மருத்துவ விதிகளும் இல்லாமல் அங்கு உள்ள ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு உள்ளனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பகுதிக்கு (ICU) நிகரான எமெர்ஜென்சி வார்டுக்குச் சென்றாலும் கூட, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழலே நிலவுகிறது.

    ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி ஒரே படுக்கையில் நோயாளிகளைத் திணிக்கும் இந்த அவல நிலை தொடர்ந்து அங்கு நீடித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களின் வேதனையை முன் வைக்கின்றனர்.

    ​இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏழை – எளிய மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து, மாவட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு (Intervention), அவசரச் சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Coimbatore Government Hospital Emergency Ward government hospital Patient Care
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை : 10வயது சிறுமி பாலியல் வழக்கு..! சாட்சி விசாரணை 24-ம் தேதி தொடக்கம்..!
    Next Article மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    June 16, 2026

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    June 16, 2026

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    வாட்ஸ் அப் மெசேஜ்… ராசிபுரத்தில் நடந்த தங்க நாணய வேட்டை

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.