Close Menu
    What's Hot

    6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    0 – 0 டிரா!. ஈக்வடாரை கதறவிட்ட குராசோ!. உலகக் கோப்பை வரலாற்றில் மிரட்டலான டிஃபென்ஸ்!

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
    Featured

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    Editor web3By Editor web3June 21, 2026Updated:June 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2486643 neetd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் (22.79 லட்சம்) மாணவர்கள் எழுதுகின்றனர்.

    கடந்த மாதம் மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் தேர்வின் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை  அந்தத் தேர்வை ரத்து செய்து, இன்று மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

    இதனால் கடந்த 37 நாட்களில் நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கோவை, சேலத்தைச் சேர்ந்த மாணவிகள் மறுதேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நீட் மறுதேர்வு இன்று நடக்க உள்ளது.

    முந்தைய முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை என்.டி.ஏ  முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு, 1.3 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

    தேர்வை நடத்த, இந்தியா மற்றும் 14 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 551 நகரங்களில் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் வசதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 1:30 மணிக்கு மேல் வந்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    சுமார் 551 இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் இந்த மறுதேர்வு தற்பொழுது எவ்வித புகாருமின்றி அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2.3 million students NEET NEET re-exam Question paper leak issues
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!
    Next Article உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!
    Editor web3
    • Website

    Related Posts

    6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    June 21, 2026

    0 – 0 டிரா!. ஈக்வடாரை கதறவிட்ட குராசோ!. உலகக் கோப்பை வரலாற்றில் மிரட்டலான டிஃபென்ஸ்!

    June 21, 2026

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    0 – 0 டிரா!. ஈக்வடாரை கதறவிட்ட குராசோ!. உலகக் கோப்பை வரலாற்றில் மிரட்டலான டிஃபென்ஸ்!

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.