இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைப்பதாகவும், அதனை பாதுகாப்பதில் இருநாடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 28ம் தேதி மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் பிரிக்கவில்லை, மாறாக அது இரு நாடுகளையும் இணைக்கிறது என்றார். நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இப்பெருங்கடல் செயல்படுவதா அவர் தெரிவித்தார். செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவின் 140 கோடி மக்களின் வாழ்த்துகளை அங்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இருநாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஒரே புள்ளியில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் முதன்முதலாகச் சந்தித்த நாடு செஷல்ஸ்தான் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
செஷல்ஸ் நாட்டின் 50-வது தேசிய தின விழா ஜூன் 29 (திங்கள்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அந்நாட்டு அதிபர் பேட்ரிக் விடுத்த அழைப்பின் பேரில், விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். விக்டோரியா விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
