Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!
    Featured

    உடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!

    Editor web3By Editor web3July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiruvarur statues
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில், சட்டவிரோதமாக உடும்பு பிடிக்கச் சென்ற இடத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த 9 சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாமணி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரும், நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள நாகநாத சுவாமி கோவில் பின்புறம் சட்டவிரோதமான முறையில் உடும்பு வேட்டைக்காகச் சென்றுள்ளனர். அங்கு புதருக்குள் உடும்பு ஒன்று புகுந்ததால், அதைத் துரத்திச் சென்று இரும்புப் பாறையைக் கொண்டு குழி தோண்டியுள்ளனர். அப்போது, இரும்புப் பொருளின் மீது ஏதோ உலோகப் பொருள் உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது, அது சாமி சிலை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன் மற்றும் வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அந்த இடத்தில் முறையாகத் தோண்டப்பட்டதில், சுமார் 3 அடி உயர நடராஜர் சிலை, பெருமாள், விஷ்ணு, அம்மன் சிலைகள் மற்றும் பீடங்கள் என மொத்தம் 9 சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன.

    மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் பழங்காலத்தைச் சேர்ந்த வெண்கல சிலைகளா அல்லது ஐம்பொன் சிலைகளா என்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே உறுதியாகத் தெரியும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார். இந்தச் சிலைகள் எப்படி அங்கு வந்தன என்பது குறித்து மன்னார்குடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    mannarkudi monitor lizards Nine statues tiruvarur Treasure
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..!! கனிமொழி எம்.பி ஆவேசம்..!!
    Next Article சினிமா பாணியில் ராஜ்யம் நடத்தும் முதல்வர் விஜய்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்..!! தோழியுடன் வசமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.