Close Menu
    What's Hot

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
    Featured

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    Editor web3By Editor web3July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anitha radha sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகள், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் அரசின் திட்டங்கள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைத் தெரிவித்தார்.

    அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை தவெக-வில் இணைய வற்புறுத்தியதாகக் கூறியது குறித்துப் பேசிய அமைச்சர், “அனிதா ராதாகிருஷ்ணன் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசியுள்ளார். தவெக-வில் யாரையும் நாங்கள் வற்புறுத்தி இணைப்பதில்லை. யார் அவரை வற்புறுத்தினார்கள் என்பதை அவர் ஆதாரத்துடன் வெளிப்படையாகச் சொல்லட்டும்,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

    அதிமுகவை விமர்சித்த அவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை மக்களுக்கான இயக்கமாகப் கட்டிக்காத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார். இதன் காரணமாகவே நிர்வாகிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒவ்வொருவராக அக்கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். தவெக-வில் சேரும் நிர்வாகிகள் குறித்த இறுதி முடிவு கட்சியின் தலைவர் விஜயுடையது என்றார்.

    முதல்வர் கரூர் செல்வது குறித்த கேள்விக்கு, தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் துறை சார்ந்த ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், முதல்வர் கரூர் செல்வது என்பது தற்போது அவசியமான ஒன்றல்ல என்று கூறினார். முதல்வர் எதற்காக அங்கு செல்கிறார், அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

    எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், அது எங்கே அமைய வேண்டும் என்பதை முதலமைச்சரே முடிவு செய்வார் என்று தெரிவித்த அவர், கோவையில் இதற்கான இடவசதி குறித்து தற்போது தீவிர ஆய்வு நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். அரசுத்துறைகளில் முறைகேடுகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் எளிதில் பட்டா பெற ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    பாஜக நயினார் நாகேந்திரனின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அரசுப் பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறித்த பட்டியலை அவர் முதலில் படித்துப் பார்க்க வேண்டும் என்று சாடினார். கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநருடன் பேசி வருவதாகவும், தனியார் பள்ளி கட்டணக் கொள்கை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள குறைகளைச் சரிசெய்யவும் முறையான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் உறுதி அளித்தார்.

    இறுதியாக, “தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களைக் காண இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருங்கள். முதல்வர் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த மாற்றத்தை மக்கள் விரைவில் உணர்வார்கள்,” என்று அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

    Anitha Radhakrishnan cm vijay EPS Kovai airport Minister Sengottaiyan tvk cm
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
    Next Article மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!
    Editor web3
    • Website

    Related Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    July 4, 2026

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    July 4, 2026

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.