Close Menu
    What's Hot

    தமிழக காங்.-ல் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முர லாபி: மாற்றம் உறுதியா?

    திற்பரப்பு படகுச் சவாரியில் பேராசிரியையிடம் அத்துமீறல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்
    Featured

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 ep
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரே இடங்களில் ஏற்படும் மின் துண்டிப்புகளை நிரந்தரமாக தடுக்க ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் (Repeat Tripping Elimination Programme – RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,  தமிழகத்தில் தற்போது 3.5 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோருக்கு பெரும்பாலும் தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் மற்றும் மின் வலையமைப்புகளில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகைய இடங்களை கண்டறிந்து, அதன் மூல காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆறு மாதங்களில் அதிகளவில் மின் தடை ஏற்பட்ட துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கென தனி பதிவேடு பராமரிக்கவும், ஒவ்வொரு மின் தடைக்கும் ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ (Root Cause Analysis) மேற்கொண்டு, தற்காலிக சீரமைப்பை மட்டுமல்லாமல் நிரந்தர பொறியியல் தீர்வுகளை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மின் தடை சம்பவங்கள் தொடர்பாக மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம், பாதுகாப்பு, திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளும் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தேவையெனில் உபகரண உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனையும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவிலான நிபுணர் குழு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) குழுவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்பு பணிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் மின் வலையமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைகள் குறையும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    electricity supply power outage Tamil Nadu power cuts uninterrupted power supply
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!
    Next Article ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காங்.-ல் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முர லாபி: மாற்றம் உறுதியா?

    July 8, 2026

    திற்பரப்பு படகுச் சவாரியில் பேராசிரியையிடம் அத்துமீறல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு

    July 8, 2026

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காங்.-ல் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முர லாபி: மாற்றம் உறுதியா?

    திற்பரப்பு படகுச் சவாரியில் பேராசிரியையிடம் அத்துமீறல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.