Close Menu
    What's Hot

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு
    Featured

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 iran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்தும் அமெரிக்கா, விதிகளை வளைத்து, போட்டியாளர்களை மிரட்டி, தடைகளை ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபடுவதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

    சமூக வலைதளமான X-இல் அவர் வெளியிட்ட பதிவில்,  “உலகக் கோப்பை போட்டியை நடத்தும் அமெரிக்க அரசின் செயல்பாடு, அதன் வெளிநாட்டுக் கொள்கையைப் போலவே உள்ளது. விதிகளை வளைப்பது, போட்டியாளர்களை மிரட்டுவது, தடைகளை உருவாக்குவது, மோசடி செய்வது ஆகியவை அவர்களின் ‘MAGA’ அணுகுமுறையாகும். ஈரான் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்காது. எங்கள் உரிமைகளை உறுதியாகப் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவிடம் எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போட்டியைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த ஆட்டத்தில் நடுவர் முடிவுகள் மற்றும் ஃபிஃபாவின் செயல்பாடுகள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

     

    எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், அர்ஜென்டினா மற்றும் அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஃபிஃபா ஆதரவாக செயல்பட்டது என்று குற்றம்சாட்டினார். எகிப்து வீரர் முஸ்தபா ஜிகோ அடித்த கோல், VAR பரிசீலனைக்குப் பிறகு சுமார் 20 விநாடிகளுக்கு முன்பு நடந்த விதிமீறலைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த முடிவு போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

    போட்டியின் இறுதிக்கட்டத்தில், ஹொசாம் ஹசன் தனது கைகளை ‘X’ வடிவில் உயர்த்திக் காட்டியதும் கவனம் பெற்றது. இது இனவெறி சம்பவங்களை சுட்டிக்காட்டுவதற்காக ஃபிஃபா 2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சைகையாகும். இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், போட்டியை இடைநிறுத்தவோ அல்லது கைவிடவோ ஃபிஃபாவுக்கு அதிகாரம் உள்ளது.

    இதற்கு முன்பும் அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகன் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடையை, ஃபிஃபா ஒழுங்கு விதிமுறைகளின் 27-வது பிரிவின் கீழ் இடைநிறுத்தியது. இதனால் அவர் பெல்ஜியத்திற்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

    இந்த முடிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாலோகனின் தடை குறித்து ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் பேசியதாக தெரிவித்த பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    முன்னதாகவே, உலகக் கோப்பை தொடரின் ஏற்பாடுகள் குறித்து ஈரான் தரப்பும் அதிருப்தி தெரிவித்திருந்தது. குரூப் சுற்றில் தோல்வியின்றி விளையாடிய போதிலும், ஈரான் அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

     

    எகிப்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய ஈரான் கேப்டன் மெஹ்தி தரெமி, ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் மெக்சிகோவின் டிஜுவானாவில் உள்ள முகாமுக்கு உடனடியாக திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால், போட்டி அட்டவணை மற்றும் பயண ஏற்பாடுகளை “பேரழிவு” என்று விமர்சித்தார்.

    அத்துடன், அரசியல் பதற்றம், விசா சிக்கல்கள் மற்றும் நீண்ட பயணங்கள் ஆகியவையும் ஈரான் அணியின் உலகக் கோப்பை பயணத்தை பாதித்ததாகவும், தொடரின் ஒழுங்கமைப்பு குறித்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது

    fifa 2026 FIFA World Cup 2026 iran president United States USA visa controversy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleTET முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
    Next Article அரசு நெல் கிடங்கில் கோர தீ விபத்து!. ரூ.3.50 கோடி மதிப்பிலான நெல் மூட்டைகள் நாசம்!
    Editor TN Talks

    Related Posts

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    July 8, 2026

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    July 8, 2026

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.