Close Menu
    What's Hot

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்
    Featured

    பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பொய் பரப்புரை மேற்கொள்வதன் வழியே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகம் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதில்,

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருப்பதாகவும்,

    மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, ‘ஓடுதளம் அமைக்க முடியாது’ என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்; மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும் எனக் கூறியுள்ளார்.

    இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியது அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியாதா எனவும்

    ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

     

    இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லது, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா? என விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன்,

    இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Nainar Nagendran Parandur Airport Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்
    Next Article நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!
    Editor TN Talks

    Related Posts

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    July 9, 2026

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    July 9, 2026

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.