Close Menu
    What's Hot

    இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

    அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!
    Featured

    நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!

    editor5By editor5July 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 27 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டத்திற்கு சிறப்பு விஜயம் செய்கிறார். இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை நேரடியாக வழங்க உள்ளார்.

    முதலமைச்சரின் இந்த வருகை கரூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்குப் புறப்படுவார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் அபிமான தலைவரை பார்த்து உற்சாகத்தில் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்கவும் தயாராக உள்ளனர்.

    கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மாலையில் பிரமாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

    பின்னர் அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், அங்கிருந்து கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கூட்ட நெரிசல் பெருங்கொடுமையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 32 அரசு பணி நியமன ஆணைகளை வழங்கி ஆறுதல் அளிக்கிறார். பல்வேறு துறைகளின் கீழ் இந்தப் பணிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர். தோல் அல்லாத (நான-லெதர்) காலணிகளை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் கரூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கருதப்படுகிறது.

    நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்து சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வாகனப் பயணப் பாதை, நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வருகை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    cm vijay Karur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்
    Next Article கரூர் : வருவாய்த்துறை உதவியாளரை ஆபாசமாக திட்டிய வி.ஏ.ஓ..! வீடியோ வைரலானதால் சர்ச்சை..!
    editor5

    Related Posts

    இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

    July 9, 2026

    அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

    July 9, 2026

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

    அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.