Close Menu
    What's Hot

    இனி ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..!! ஐஆர்சிடிசிக்கு புதிய இணையதளம்..!!

    மீண்டும் விஸ்வரூபம்.. ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா..!! சுகாதாரத் துறை அலர்ட்..!!

    போர் படை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான காவலன் இந்திய கடற்படை – ராஜ்நாத் சிங் பெருமிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாதுகாப்புத் துறையின் புதிய சக்தி மையமாகும் ஆந்திரா – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்
    Featured

    பாதுகாப்புத் துறையின் புதிய சக்தி மையமாகும் ஆந்திரா – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 rajnath singh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கடற்படையின் மேம்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பலைபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தித் துறையின் புதிய சக்தி மையமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    ஆந்திரப் பிரதேசம் வான், கடல், நிலம் மற்றும் ஆளில்லா (Unmanned) பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் கூறினார்.

    புட்டபர்த்தியில் மேம்பட்ட நடுத்தர போர் விமானமான AMCA-வுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பறக்கும் சோதனை மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், அனகாப்பள்ளி மாவட்டத்தில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தின் புதிய கடற்படை ஆயுத உற்பத்தி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அங்கு தன்னாட்சி நீர்மூழ்கி வாகனங்கள், டார்பிடோக்கள் மற்றும் நீருக்கடிப் பாதுகாப்பு அமைப்புகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுத அமைப்புகள் இனி விசாகப்பட்டினம் அருகிலேயே தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    “வானில் AMCA, கடலின் ஆழத்தில் BDL கடற்படை அமைப்புகள், கர்னூலில் ட்ரோன்கள், இன்று கடல்மேல் ஐஎன்எஸ் மகேந்திரகிரி என ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அனைத்து தளங்களிலும் வலுப்படுத்தி வருகிறது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

    மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனம் உள்நாட்டிலேயே கட்டியுள்ள ஐஎன்எஸ் மகேந்திரகிரி, சுமார் 6,670 டன் எடை கொண்ட பல்நோக்கு போர்க்கப்பலாகும். இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தப் போர்க்கப்பலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மற்றும் டார்பிடோ ஏவுதளங்கள், அதிநவீன மின்னணு போர் (Electronic Warfare) அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய திறனும் உள்ளது.

    மேற்கு ஆசிய மோதலுக்குப் பிறகு ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்‌ஷா’ நடவடிக்கையின் மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பாக வழிகாட்டியதை ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.

    “இந்திய கடற்படை இன்று ஒரு போர் படையாக மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலிமையான காவலராகவும் திகழ்கிறது” என்று அவர் பாராட்டினார்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய கடற்படையில் 6 நவீன போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் கப்பல் கட்டும் திறனுக்கும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கிற்கும் மிகப்பெரிய சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

    புதிய தொழில்நுட்பங்களும் பாரம்பரிய ராணுவ வலிமையும் ஒன்றுக்கொன்று துணைபுரிவவை என்றும், இரண்டிலும் இந்தியா முன்னேற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு திறன் மற்றும் பாதுகாப்பு வலிமையை மேலும் உயர்த்தும் முக்கிய போர்க்கப்பலாக ஐஎன்எஸ் மகேந்திரகிரி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Andhra Pradesh Defence Manufacturing Defence Sector Rajnath Singh
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article” தவெக அரசு இந்து விரோத அரசாக மாறிவிட்டது” –  நயினார் நாகேந்திரன் கண்டனம்
    Next Article திருச்சி கிழக்கில் விஜய்யின் நிழல் அரசியல்… ஜான் ஆரோக்கியசாமிக்கு ஜாக்பாட்?
    Editor TN Talks

    Related Posts

    இனி ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..!! ஐஆர்சிடிசிக்கு புதிய இணையதளம்..!!

    July 11, 2026

    மீண்டும் விஸ்வரூபம்.. ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா..!! சுகாதாரத் துறை அலர்ட்..!!

    July 11, 2026

    போர் படை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான காவலன் இந்திய கடற்படை – ராஜ்நாத் சிங் பெருமிதம்

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..!! ஐஆர்சிடிசிக்கு புதிய இணையதளம்..!!

    மீண்டும் விஸ்வரூபம்.. ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா..!! சுகாதாரத் துறை அலர்ட்..!!

    போர் படை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான காவலன் இந்திய கடற்படை – ராஜ்நாத் சிங் பெருமிதம்

    தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..!! கம கம பிரியாணி போட்டு அசத்தல்..!!

    அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..!! மோதிக்கொண்ட சிவிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள்..!! விழுப்புரத்தில் பரபரப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.