Close Menu
    What's Hot

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

    பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!

    தவெக vs திமுக..!! அடித்துக்கொள்ளும் கட்சிகள்..!! உள்மோதலால் பலவீனமடையும் மாநில உரிமைகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போர் படை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான காவலன் இந்திய கடற்படை – ராஜ்நாத் சிங் பெருமிதம்
    Featured

    போர் படை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான காவலன் இந்திய கடற்படை – ராஜ்நாத் சிங் பெருமிதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 rajnath singh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கடற்படை என்பது போர் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடும் படை மட்டு அல்ல, அது  நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலுவான காவலனாகவும் திகழ்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

     விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய அவர், “அண்மைய நிகழ்வுகள், எந்த ஒரு நாட்டிற்கும் திறமையான மற்றும் உடனடியாக செயல்படும் கடற்படை எவ்வளவு அவசியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன” என்றார்.

    மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கிய பிறகு, ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்‌ஷா’ நடவடிக்கையின் மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பாக வழிகாட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

    “இதன் மூலம் இந்திய கடற்படை ஒரு போர் படையாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார நலன்களின் வலுவான பாதுகாவலராகவும் உருவெடுத்துள்ளது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

    இந்தோ-பசிபிக் பிராந்தியம் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    “பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ‘மஹா சாகர்’ (MAHA SAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற தொலைநோக்கு பார்வையை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அந்தப் பகுதியில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்” என்று அவர் கூறினார்.

    மேலும், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது மனிதாபிமான உதவிகள், கடல் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய கடற்படை முதலில் களமிறங்கும் நம்பகமான படையாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

     பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருவதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், “உள்நாட்டிலேயே ஒரு போர்க்கப்பலை உருவாக்குவது என்பது ஒரு புதிய போர் தளத்தை உருவாக்குவது மட்டுமல்ல; அதன்மூலம் நமது வடிவமைப்புத் திறன், தொழில்நுட்ப வலிமை மற்றும் திறமையான மனிதவளமும் மேம்படுகின்றன” என்று தெரிவித்தார்.

    போர்க்கப்பல் கட்டுமானம் என்பது ஒரு கப்பலை உருவாக்குவது மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள முழுமையான தொழில்துறை சூழலையும் உருவாக்குகிறது என்றும், எதிர்காலத்தில் இந்தியாவை உலகின் முன்னணி கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    Defence Minister India's Economic Interests Indian Navy Maritime Security Rajnath Singh
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..!! கம கம பிரியாணி போட்டு அசத்தல்..!!
    Next Article மீண்டும் விஸ்வரூபம்.. ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா..!! சுகாதாரத் துறை அலர்ட்..!!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

    July 11, 2026

    பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!

    July 11, 2026

    தவெக vs திமுக..!! அடித்துக்கொள்ளும் கட்சிகள்..!! உள்மோதலால் பலவீனமடையும் மாநில உரிமைகள்..!!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

    பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!

    தவெக vs திமுக..!! அடித்துக்கொள்ளும் கட்சிகள்..!! உள்மோதலால் பலவீனமடையும் மாநில உரிமைகள்..!!

    மாமல்லபுரம்; போர்வெல் பணியின்போது நேர்ந்த துயரம் ; மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

    கெட்டுப்போன பரோட்டா விற்பனை..!! ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’-க்கு பறந்த நோட்டீஸ்..!! FSSAI அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.