நாளை கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள். இந்த நிலையில் அவர் ஞானபீட விருது வாங்க நாளை டெல்லி செல்ல இருப்பதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் உறவுகளே!
வணக்கம்.
நாளை
என் பிறந்தநாளில்
சென்னையில் இல்லை;
டெல்லி செல்கிறேன்
ஞானபீட விருதினைப்
பிறந்தநாளில் பெறும்
பெரும்பேறு வாய்த்திருக்கிறது
எங்கிருந்தாலும்
என்னை ஒருகணம்
நினைவு கூருங்கள்;
நாடும் மொழியும்
நலமுற வாழ்த்துங்கள்
இந்த 73 வயதில்
என்ன தோன்றுகிறது என்பதை
உங்களுக்குச் சொல்ல வேண்டும்
பொன்னும் பொருளும்
மண்ணும் பதவியும்
நிலைபெறுவதில்லை
செலுத்தும் அன்பும்
செய்யும் அறமுமே
நிலைபெறுகின்றன
என் வாழ்வு
அன்பின் வழியது;
எழுத்து
அறத்தினும் வலியது.
இரண்டையும் போற்றுகிறேன்
அன்பு செலுத்துக;
அறம் செய்க;
வாழ்வாங்கு வாழ்க!
