Close Menu
    What's Hot

    நிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!

    3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!
    Featured

    திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், முதியவர்கள் எளிமையாகவும் விரைவாகவும் சுவாமியை தரிசனம் செய்ய ஆந்திர அரசு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

    65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வெறும் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கும் வகையில் “இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை” ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முதியவர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (உதாரணமாக ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் (S-1) காண்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்திற்கு கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் முதியவர்கள் சிரமமின்றி எளிதாக நடந்து செல்லலாம். இந்த பிரத்யேக வரிசைக்குள் நுழைந்தவுடன், வெறும் 30 நிமிடங்களில் ஏழுமலையானை மிக அருகில் தரிசித்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.

    தரிசனத்தை முடித்து வரும் முதியவர்கள் அனைவருக்கும் சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. வாகன நிறுத்துமிடத்தில் (Parking) இருந்து தரிசன கவுண்டருக்கும், தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் முதியவர்கள் எளிதாகச் செல்ல இலவச பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமின்றி, எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் நிம்மதியாக ஏழுமலையானை தரிசனம் செய்து வரலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!. அரசின் அடக்குமுறைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம்!
    Next Article ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: ₹755.83 கோடியில் 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய TNMSC டெண்டர்!
    Editor web1
    • Website

    Related Posts

    நிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!

    July 14, 2026

    3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து

    July 14, 2026

    வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!

    3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.