Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!
    Featured

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    Editor web4By Editor web4July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்தில் உயர்க்கல்வி பயின்று வந்த பஞ்சாப்பை சேர்ந்த மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்தவர் கிரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண். இவர் 2 வருடத்திற்கு முன்பு மாணவர் விசாவில் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். தனது படிப்பை முடித்த அவர், லண்டனின் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடந்த 12-ம் தேதி காலை கிரந்திப் கவுர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அவரை தாக்கியுள்ளார். கிரந்தீப் அவரிடம் இருந்து தப்பிக முயல, தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கிரந்தீப்பின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

    இந்த கோர நிகழ்வில் படுகாயமடைந்த கிரந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த லண்டன் போலீஅசர் கிரந்தீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பிறகு குற்றவாளி கையில் கத்தியுடன் வீட்டு வாசலை கடந்து செல்லும் சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான டேனியல் சீன் ஜேம்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு லண்டனில் 20 வயது இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய டேனியல் கிரந்தீப் வீட்டில் குதித்ததும், அங்கிருந்த கிரந்தீப்பையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    கிரந்தீப்பின் தந்தை சுக்தேவ் சிங் மறும் தாய் பால்ஜித் கவுர் தங்களது நிலத்தை விற்று, மகளை லண்டனில் படிக்க வைப்பதற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும், தற்போது தங்களது மகளையும் காண முடியாமல் போனதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தங்கள் மகளின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிவர்மன் மரணத்தைச் சுற்றி சர்ச்சை..!! அப்பாவு எழுப்பிய கேள்விகளால் சூடுபிடித்த விவகாரம்!
    Next Article தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?
    Editor web4

    Related Posts

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    July 16, 2026

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    July 16, 2026

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.