நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசை பல்வேறு முக்கிய விவகாரங்களில் பொறுப்பேற்கச் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி (CPP) கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “சந்திரா சோரி” (Chanda Chori) என குறிப்பிடப்பட்ட தேர்தல் நிதி விவகாரம், மத நம்பிக்கைக்கு துரோகம், தேர்வுத் தாள் கசிவுகள், கல்வி அமைப்பின் சீரழிவு, அரசியல் அமைப்புகளின் நிறுவனமயமாக்கல், அரசியல் கட்சிகளை உடைக்கும் நடவடிக்கைகள், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், கடுமையான விலைவாசி உயர்வு, வெளியுறவுக் கொள்கை தோல்விகள், மூலோபாயப் பிழைகள், 3.5 கோடி வாகன உரிமையாளர்களை பாதிக்கும் வகையிலான எத்தனால் கலவை (Ethanol Blending) திட்டம், கட்டுப்பாடற்ற வன அழிப்பு மற்றும் பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் (OBC), சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை எதிர்கொள்ள உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் நாட்டின் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் எதிர்கால நம்பிக்கைகளையும் நேரடியாக பாதிப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்விவகாரங்கள் குறித்து நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி (CPP) கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், மழைக்கால கூட்டத்தொடரில் இவை அனைத்தையும் எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கோரப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
