மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணையவழியில் ஒவ்வொருவரும் சுய கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில், தனது சுய விவரத்தை இணையவழியில் பதிவிடும் வீடியோவைப் பகிர்ந்துள்ள முதலமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் பதிவையும் இட்டுள்ளார்.
அதில், அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு எனக் கூறியுள்ளார்.
