Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நான் நல்லா இருக்கேன்.. என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. பேரணியில் பங்கேற்கணும்..!! வாங்சுக் வேண்டுகோள்!
    Featured

    நான் நல்லா இருக்கேன்.. என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. பேரணியில் பங்கேற்கணும்..!! வாங்சுக் வேண்டுகோள்!

    editor5By editor5July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நாட்டின் கல்வி அமைப்பை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிர்வாகத் தோல்விகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக, புகழ்பெற்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் டெல்லி காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அகற்றி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிறப்பு மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    சோனம் வாங்சுக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்தில், “எனது உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. இன்று நடைபெறும் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவமனையிலிருந்து தற்காலிகமாக வெளியேற அனுமதி கோரியுள்ள அவர், தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்கும் வரை அல்லது மழைக்காலக் கூட்டத்தொடரில் கல்வித் துறை விவாதத்துக்கு உறுதியளிக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    இன்று பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சூழலில், ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு நேற்றே போலீஸ் தடை விதித்தது. பாராளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றவர்களுக்கு எதிராக தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள், குறிப்பாக அலுவலகத்துக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    போராட்டத்திற்கிடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவர், “கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எங்கள் நீண்டகால கோரிக்கைகளில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தால் நாங்களும் தயாராக உள்ளோம். தாமதமாக வந்த அழைப்பு என்றாலும், கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க உரையாடலுக்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

    இந்தப் போராட்டம் நாடு முழுவதும் கல்வித் துறையில் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Hunger Strike protest sonam wangchuk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமஞ்சள், சிவப்பு நிற வண்ணங்களுடன் டீசல், சி.என்.ஜி பேருந்துகள் விரைவில் அறிமுகம்  
    Next Article “அரசை விமர்சிப்பவர்களை யாரையும் கைது செய்யக் கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது” – திருநாவுக்கரசர்
    editor5

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.