Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்திய மாலுமிகள் 4 பேர்  உக்ரைன் கடற்கரையில் உயிரிழப்பு: ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
    Featured

    இந்திய மாலுமிகள் 4 பேர்  உக்ரைன் கடற்கரையில் உயிரிழப்பு: ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 ship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்ரைன் கடற்கரைக்கு அருகே ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை (MEA) ரஷ்யாவின் Charge d’Affaires (பொறுப்பு தூதரக அதிகாரி)-யை அழைத்து தனது கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது.

    வெளியுறவுத் துறை அதிகாரிகள், இந்தியர்கள் உயிரிழக்கக் காரணமான வணிகக் கப்பல் மீதான தாக்குதல் ஏற்க முடியாதது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் ரஷ்ய தரப்பிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை 19 மாலை உக்ரைனின் ஓடெசா (Odesa) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கினியா-பிசாவ் (Guinea-Bissau) நாட்டுக் கொடி ஏந்திய MV Golden Leo என்ற சரக்குக் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    அப்போது கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இதில் 5 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். மேலும், ஒரு இந்தியர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்ததுடன், காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளது.

    மேலும், வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் “மிகவும் கண்டிக்கத்தக்கது; இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

    இதேபோல், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹா (Andrii Sybiha), உக்ரைனின் கடல் வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். கப்பலில் இந்தியா மற்றும் சிரியாவைச் சேர்ந்த பணியாளர்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யாவின் க்ரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) மூலம் MV Golden Leo கப்பல் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போருக்குப் பிறகு, இந்த மோதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும். இந்தச் சம்பவத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வழங்கி வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

    Diplomatic Protest Indian Government Indian Seafarers Ministry of External Affairs russia Ukraine Coast
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் நெரிசல்; அரசுப் பணி வழங்கிய விவகாரம்!. பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்!.
    Next Article பிரிந்து சென்றவர்களை ஓரணியில் இணைக்க வேண்டும்..! அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்..!
    Editor TN Talks

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.