Close Menu
    What's Hot

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!
    Featured

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul gandhi black dress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜே.எம்.எம். எம்.பி. மஹுவா மாஜி உள்ளிட்ட பல தலைவர்கள் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர்.

    முன்னதாக, நீட் விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்கக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் நேற்று  பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்தத் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “நாங்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம். கருப்பு என்பது போராட்டத்தின் நிறம்; அது துக்கத்தின் நிறமும் கூட” என்று குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வில் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அமைச்சரை நீக்க அரசு ஏன் தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மாணவர்களின் நலனுக்காகவும் அவற்றுக்கு நீதி கிடைப்பதற்காகவுமே இந்தத் போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, இதில் எந்தவித அரசியல் ஆதாயமும் இல்லை என்று ஜே.எம்.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்களை எழுப்பி வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    dressed in black neet protest Parliament today
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மாணவர்களின் போராட்டமல்ல, நாடாளுமன்றத்திலும் மாணவர்களிடமும் நடப்பதுதான் ஜனநாயக விரோதம்” – பிரியங்கா காந்தி கடும் தாக்கு  
    Next Article டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    July 22, 2026

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    July 22, 2026

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    பாஜகவில் இணையும் திமுக… என்ன செய்யப்போகிறது அதிமுக? – கே.சி.பழனிசாமி ஆதங்கம்

    CJP போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டை குழப்புவதே..!! ஸ்ரீதர் வேம்பு பாய்ச்சல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.