Close Menu
    What's Hot

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.
    Featured

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Editor web3By Editor web3July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    students protest supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் “காவல்துறை வன்முறையை” எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை, “காணொளிகளைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை” என்று கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான, நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோரையும் கொண்ட அமர்வின் முன்பு இந்த விவகாரம் தொடர்பான மனு அளிக்கப்பட்டது. அதாவது, வழக்கை அவசரமாக பட்டியலிடக் கோரிய மனுதாரரின் வழக்கறிஞர், திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறை வன்முறை நடத்தியதாகவும், அந்த மனுவில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் அடங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், “காவல்துறை வன்முறை தொடர்பான காணொளிகளும் என்னிடம் உள்ளன… நாளை விசாரணைக்குப் பட்டியலிட முடிந்தால் நன்றாக இருக்கும், அங்கு மாணவர்கள் இருக்கிறார்கள்” என்றும் வாதிட்டார்.

    இதைக் கேட்ட தலைமை நீதிபதி, “எங்களுக்கு அந்த வீடியோக்களை பார்க்க விருப்பமில்லை, பார்ப்பதற்கும் நேரமில்லை… நாங்கள் காணொளிகளைப் பார்க்க விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கறிஞர் மீண்டும் காணொளி ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறியபோது, “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நாங்கள் எந்தக் காணொளியையும் பார்க்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி பதிலளித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை தொடர்பானது இந்த மனுவாகும். போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை தடுப்புகளை மீற முயன்றதால் போராட்டம் வன்முறையாக மாறியது. கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தடியடிகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதில், இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன.

    இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் சிஜேபி நடத்தி வரும் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமையன்று இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளது. ஜூன் 20 அன்று தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தேர்வு முறைகேடுகள் குறித்த பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா ஆகியவை வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அங்கிருந்தபடியே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Chief Justice of India lathi-charge on students No time No time to watch videos Police brutality Surya Kant we do not have time to watch videos
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீசிங் வரனுமா? இந்த பஸ்ஸில் ஏறுங்க..! ரூ.1,600 கொடுத்து நோயை வாங்கனுமா? 
    Next Article திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்
    Editor web3
    • Website

    Related Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    July 22, 2026

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.