Close Menu
    What's Hot

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் மத அடையாளம்… சர்ச்சைக்குரிய தர்மா ஓவியம் அகற்றம்
    Featured

    இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் மத அடையாளம்… சர்ச்சைக்குரிய தர்மா ஓவியம் அகற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 military
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய ‘தர்மா’ ஓவியம் அகற்றப்பட்டதை, முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

    இந்திய ராணுவத் தளபதி அலுவலக ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த மகாபாரதத்தை மையமாகக் கொண்ட ‘கரம் க்ஷேத்ரா (Karam Kshetra)’ ஓவியம் அமைதியாக அகற்றப்பட்டுள்ளது.

    ரசியல், மத மற்றும் கலாச்சார அடையாளங்களை முன்னிறுத்துவதாக இந்த ஓவியம் மீது எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு ராணுவ கட்டளை (Eastern Command) வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் தனது அலுவலகத்தில் உரையாற்றும் போது, முன்பு இருந்த ஓவியத்துக்கு பதிலாக இந்திய ராணுவத்தின் சின்னம் (Army Insignia) பின்னணியில் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த ஓவியம் 2024 டிசம்பரில் நிறுவப்பட்டது. இதில் பாங்காங் ஏரி கரையில் டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், தேரில் வரும் வீரர், காவி உடை அணிந்த முனிவர் உள்ளிட்ட புராண மற்றும் நவீன ராணுவக் காட்சிகள் ஒன்றாக இடம்பெற்றிருந்தன.

    இந்த ஓவியத்தை நிறுவுவதற்காக, பல தசாப்தங்களாக ராணுவத் தளபதி அலுவலகத்தில் இருந்த 1971 இந்தியா–பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் சரணடைந்த வரலாற்று ஓவியம் அகற்றப்பட்டது. இதுவே நாடு முழுவதும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    புதிய ஓவியம் இந்துத்துவ சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாகவும், 1971 போரில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் கிடைத்த வரலாற்று வெற்றியின் நினைவுகளை பின்தள்ளும் முயற்சியாகவும் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.

    011 military A

    இந்த நிலையில் ஓவியம் அகற்றப்பட்டதை முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக் வரவேற்று, “ராணுவச் சின்னம் மீண்டும் பின்னணியாக வந்துள்ளது. அடுத்து 1971 சரணடைவு ஓவியமும் அதன் பழைய இடத்திற்கே திரும்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

    முன்னாள் மேஜர் ஜெனரல் கே. கோரானாவும், “1971-ம் ஆண்டு வெற்றியை நினைவூட்டும் அந்த வரலாற்று ஓவியம் மீண்டும் அதன் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். ராணுவத் தளபதியின் அலுவலகத்தில் மத அடையாளங்களைக் கொண்ட ஓவியங்களுக்கு இடமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் இந்திய ராணுவத்தின் அரசியல் சார்பற்ற தன்மை, பாரம்பரியம் மற்றும் ராணுவ அலுவலகங்களில் மதச் சின்னங்களின் இடம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Army Headquarters Defence News Dharma Painting Indian Army Religious Controversy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!
    Next Article அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    July 24, 2026

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.