மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக செய்தியார்கள் எழுப்பிய கேள்விக்கு விடையளித்து அவர் கூறியதாவது…
ஒன்றிய அமைச்சரின் ராஜினாமா ஒன்று மட்டுமே நீட்டுக்கான தீர்வல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களின். நிலைப்பாடு.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவி சாய்த்துள்ளதுதான் இந்த ராஜினாமா.
அதே நேரம் நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு ராஜினாமவை மட்டும் வைத்து அந்த பாதிப்புகளை மூடி மறைக்க முடியாது.
மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? இதனை முன்பே செய்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் தவறு நடந்தபிறகு மூடி மறைக்கப்படுகிறது.
இந்த ராஜினாமா என்பது மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
நீட் தேர்வு என்பது ஒன்றிய அரசின் தவறான கொள்கை முடிவு; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு வேண்டும் என்பது நமது கோரிக்கை. அதன் முதற்கட்டமாக ராஜினாமா செய்யப்பட்டு்ள்ளது.
மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு.
