Close Menu
    What's Hot

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காமராஜர் காலை உணவுத் திட்ட டெண்டர்..!! கடும் நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு..!!
    Featured

    காமராஜர் காலை உணவுத் திட்ட டெண்டர்..!! கடும் நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு..!!

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை: பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உணவு விநியோக ஒப்பந்தத்திற்கான டெண்டர் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் காலை 7.30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடான உணவை இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்களில் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விநியோகம் செய்ய வேண்டும். உணவு விநியோக நடவடிக்கைகள் முழுமையாக மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் சான்று பெற்ற பின்னரே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு 150 முதல் 200 கிராம் எடையுடன், சுமார் 294 கலோரி ஆற்றலைத் தரும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு அமைப்புகள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 13 வகை உணவுகளில் நாளுக்கு ஒன்றை மாற்றி மாற்றி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவை வருமாறு: ரவா உப்புமா + சாம்பார், சேமியா உப்புமா + சாம்பார், அரிசி உப்புமா + சாம்பார், கோதுமை உப்புமா + சாம்பார், காய்கறி ரவா கிச்சடி, காய்கறி சேமியா கிச்சடி, காய்கறி சோள கிச்சடி, காய்கறி கோதுமை கிச்சடி, ரவா பொங்கல் + சாம்பார், வெண் பொங்கல் + சாம்பார், சர்க்கரை பொங்கல் + கிச்சடி, ரவா கேசரி + கிச்சடி, சேமியா கேசரி + கிச்சடி ஆகியவை ஆகும்.

    காமராஜரின் பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம் மாணவர்களின் உடல் வளர்ச்சி, கல்வி ஆர்வம் மற்றும் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் வெற்றிக்கு உணவின் தரம், சூடு மற்றும் சரியான நேர விநியோகம் மிக முக்கியம் என்பதால் அரசு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. டெண்டரில் ஆர்வம் உள்ள நிறுவனங்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, அவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Kamarajar Breakfast Scheme TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?
    Next Article கொஞ்சம் கொஞ்சமாக சரியும் அதிமுக கோட்டை..!! 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு..!!
    editor5

    Related Posts

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    July 28, 2026

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    July 28, 2026

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    சிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.