Close Menu
    What's Hot

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!
    Featured

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Editor web2By Editor web2August 4, 2026Updated:August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 nirmal kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்களுக்கு எதிராகப் பொதுவெளியில் அவதூறாகப் பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வக்கிரமான கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா எனச் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றிப் பொதுவெளியில் கொச்சையாகவும் வக்கிரமாகவும் பேசியுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    ஒரு சாதாரண நபர் அல்லாமல், பொறுப்பான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு கேவலமாகப் பேசுவது சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவர் எம்.எல்.ஏ-வாகவோ அல்லது பொது வாழ்க்கையிலோ நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. இதனால்தான் மக்கள் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர்” என்று சாடினார்.

    தொடர்ந்து அதிமுகவை விமர்சித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற அவதூறுகளுக்கு உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், எடப்பாடி பழனிசாமி திமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்க்கால் குதிரை போலச் செயல்படுகிறார். முன்பு ஜெயலலிதாவைப் பற்றி உதயநிதி அவதூறாகப் பேசியபோதும் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தார். உதயநிதியின் இந்த வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    மேலும், காவல்துறையில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது எவ்விதத் தயட்சியுமின்றிச் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

    EPS Nirmalkumar TamilNaduPolitics UdhayanidhiStalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான வழக்கு… அமலாக்கத்துறை மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
    Editor web2
    • Website

    Related Posts

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    August 4, 2026

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.