Close Menu
    What's Hot

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!
    உலகம்

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    Editor web1By Editor web1August 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரிவரும் பலுசிஸ்தான் பகுதி, ஆகஸ்ட் 11-ஆம் தேதியை தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 11-ஐ தேர்ந்தெடுத்துள்ள பலுச் அமைப்புகள், உலக நாடுகள் தங்களை ஒரு சுதந்திரத் தனி நாமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

    ‘குடியரசுப் பலுசிஸ்தான்’ (Republic of Balochistan) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பலுச் மக்கள் தங்கள் வீடுகள், சந்தைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுதந்திர பலுசிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி, இந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என பலுச் சுதந்திர இயக்கத் தலைவர் மீர் யார் அழைப்பு விடுத்துள்ளார்.

    பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து விடுதலை பெற்ற போது, பலுசிஸ்தான் முதல்முறையாக கடந்த 1947 ஆகஸ்ட் 11 அன்று தனது சுதந்திரத்தை அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பைக் குறிக்கும் விதமாகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பலுச் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    பாகிஸ்தானின் தவறான கொள்கைகளாலும் ராணுவ நடவடிக்கைகளாலும் அப்பகுதி நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பலுச் அமைப்புகள், சர்வதேச சமூகமும் இந்தியாவும் பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஏற்று ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

    பாகிஸ்தான் அரசாங்கம் ஆகஸ்ட் 14-ம் தேதியைக் சுதந்திர தினமாகக் கொண்டாடும் நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பலுசிஸ்தான் தரப்பில் இருந்து சுதந்திர தின அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!
    Next Article விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி
    Editor web1
    • Website

    Related Posts

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    August 4, 2026

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    August 4, 2026

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை!! தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்!!

    ஒரே கிளிக்கில் டாஸ்மாக் மதுபானம்.. புதிய இணையதளம் மூலம் நாளை முதல் சேவை!

    6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாற்றம்.. ஒரே புத்தக முறையை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை!

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.