Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா
    Featured

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 seik
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என் மக்களை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents Club of South Asia) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேசத்தின் நிலை குறித்து வேதனையுடன் பேசினார்.

    “கடந்த இரண்டு ஆண்டுகளாக என் அன்பு வங்கதேசம் துயரத்தில் இருப்பதை பார்த்து வருகிறேன். 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் 30 லட்சம் பேர் உயிர்தியாகம் செய்து உருவாக்கிய வங்கதேசம் இதுவல்ல” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

    2024-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய அவர், “அது அமைதியான மாணவர் போராட்டம் அல்ல. ஆரம்பத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தீர்க்க அரசு முயன்றது. ஆனால் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மாணவர் போராட்டத்தை வன்முறையான அரசியல் ஆயுதமாக மாற்றின. இறுதியில் என் ராஜினாமாவை மட்டுமே கோரும் இயக்கமாக அது மாறியது” என்று குற்றம்சாட்டினார்.

    தனது தந்தை Sheikh Mujibur Rahman, குடும்பத்தினர் மற்றும் விடுதலைப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்தபோது ஷேக் ஹசீனா பலமுறை உணர்ச்சிவசப்பட்டார்.

    2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாணவர் தலைமையிலான போராட்டத்தையடுத்து தனது 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேற 30 முதல் 40 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தன் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் பல்வேறு வழக்குகள் குறித்து, “மரண தண்டனையோ, பொய்யான வழக்குகளோ என்னை அச்சுறுத்த முடியாது. அவை அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள்” என்று கூறினார்.

    வங்கதேசத்திற்கு எப்போது திரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, “அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன்” என்று ஷேக் ஹசீனா பதிலளித்தார்.

    Bangladesh News Bangladesh Politics Emotional Speech Exile Sheikh Hasina
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா
    Next Article காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்
    Editor TN Talks

    Related Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    August 5, 2026

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    August 5, 2026

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.