Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு மும்முரம்..! புதிய வடிவமைப்புகளில் கலைஞர்கள் அசத்தல்..!
    Featured

    கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு மும்முரம்..! புதிய வடிவமைப்புகளில் கலைஞர்கள் அசத்தல்..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பட்டறைகளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இரவும் பகலும் ஓய்வின்றி கலைஞர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், பட்டறைகளிலேயே திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

    பல தலைமுறைகளாக இந்தக் கலைத் தொழிலை மேற்கொண்டு வரும் கைவினைக் கலைஞர்கள், இந்த ஆண்டும் பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.

    இந்த ஆண்டு சிறப்பம்சமாக, பாகுபலி ஸ்டைல் விநாயகர், சிவன் தலையுடன் வடிவமைக்கப்பட்ட விநாயகர், குதிரை மற்றும் மயில் வாகனங்களில் காட்சியளிக்கும் விநாயகர், 8 அடி உயர மங்கள விநாயகர், மேலும் காளையுடன் மயில் வடிவில் 11 அடி உயர சிறப்பு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு புதிய மாடல்கள் தயாராகி வருகின்றன.

    3 அடி முதல் 11 அடி உயரம் வரை பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் பெயிண்டிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அதன்பிறகு அடுத்த 10 முதல் 20 நாட்களுக்குள் பொதுமக்கள் பட்டறைகளுக்கு நேரில் வந்து தங்களுக்கு விருப்பமான சிலைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம் என்றும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், உள்ளூர் கலைஞர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். அரசு விதிமுறைகளின்படி 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் தயாரிக்காமல் இருப்பதாக கூறும் அவர்கள், விழா நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 13 மற்றும் 14 அடி உயர சிலைகள் கொண்டு வரப்பட்டு நிறுவப்படுவது தங்களது தொழிலை கடுமையாக பாதிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

    “அரசின் விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும். நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சிலைகளுக்கும் அதே விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    மேலும், ஒரு பெரிய விநாயகர் சிலையை உருவாக்குவது என்பது ஒரே நாளில் முடியும் பணியல்ல என்றும், ஒவ்வொரு சிலையின் பின்னாலும் 3 முதல் 4 மாதங்கள் வரை இடைவிடாத உழைப்பு, கைவினை நுணுக்கம் மற்றும் பல தலைமுறைகளாக கடத்தி வரும் பாரம்பரிய கலை அடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு… வேளாண்ட் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்
    Next Article ஸ்தம்பித்த சென்னை.. சாலைப் பணிகள் தேக்கம்.. கிடப்பில் முக்கிய திட்டங்கள்!
    Editor web4

    Related Posts

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    August 6, 2026

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    August 6, 2026

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.